முஜிரா நடனம் என்று கூறி பீகார் மக்களை அவமதிப்பதா? பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம்

1 Min Read

பாட்னா, மே 27 பிரதமர் மோடி முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பீகார் மக் களை அவமதித்து விட்டார் என காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பீகாரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கார்கே பேசியதாவது: நாங்கள் பாகிஸ்தானுடன் போரிட்டு வங்காளதேசத்துக்கு சுதந்திரம் பெற்று தந்தோம். சீனா இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகளை யும், சாலைகளையும் கட்டி ஆக்கிரமித்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி மவுனம் காக் கிறார். பா.ஜ., அரசு பணக்காரர்களை ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுடன் நிற்கிறது.

முஜ்ரா நடனம்:

பிரதமர் மோடி முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பீகார் மக்களை அவமதித்து விட்டார். ஏனெனில் முஜ்ரா நடனம் பீஹாரில் ஆடப்படுகிறது. இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல். ராகுலுக்கும், மோடிக்குமான தேர்தல் அல்ல. இவ்வாறு அவர் பேசினார். தேர்தல் பிரசாரத்தில், இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக இண்டியா கூட்டணி கட்சியினர் ‘முஜ்ரா’ நடனமாடலாம் என பிரதமர் மோடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *