பெங்களூரு, மே 26– பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கருநாடக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச காட்சிப் பதிவுகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப் படும் நபராக அறிவிக்கப்பட்ட பிரஜ்வல் வெளிநாடு தப்பிவிட்டார்.
பிரஜ்வலின் கடவுச் சீட்டை ரத்து செய்தால், அவர் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை கடவுச் சீட்டை முடக்கவில்லை என்று கருநாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறப்பு புல னாய்வுத் துறை நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட்டை சுட் டிக்காட்டி கடிதம் எழுதியபோதும், வெளியுறவுத்துறை எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ரஜ்வால் ரேவண்ணா மீதான வழக்கு: ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒத்துழைக்கவில்லை! கருநாடக அரசு குற்றச்சாட்டு!
Leave a Comment