பிஜேபியுடன் சேர்ந்த பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணா கடவுச்சீட்டை ரத்து செய்ய நடவடிக்கை

Viduthalai
2 Min Read

ஒன்றிய அரசுக்கு சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரை

பெங்களூரு, மே 20- வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரஜ் வல் ரேவண்ணாவின் கடவுச்சீட்டை ரத்து செய்யும் நடவடிக்கைக்காக ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்ய சிறப்பு புலனாய்வு குழு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டில் தலைமறைவு
ஹாசன் நாடாளுமன்ற தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர்மீது பாலியல் வன்முறை வழக்குகள் 3 பதிவாகி உள்ளன. இவரது தந்தை யான மேனாள் அமைச்சரும், ஒலேநரசிப்புரா தொகுதி சட்ட மன்ற உறு:பபினருமான எச்.டி. ரேவண்ணா மீதும் பாலியல் தொல்லை, கடத்தல் வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்த வழக் குகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தற்போது பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அவர் ஜெர்மனியில் இருந்து லண்டனுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத பிரஜ் வல் ரேவண்ணாவை தேடப்படும் நபராக அறிவித்து, அவருக்கு எதி ராக புளூகார்னர் அறிக்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை கைது செய்ய சி.பி.அய். அதிகாரிகளிடம் வழக்கு சம்பந்தப் பட்ட முக்கிய ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழு காவல்துறையினர் அளிக்கவேண்டும்.

கடவுச்சீட்டு ரத்து
அதாவது பலாத்கார வழக்கு களில் அவருக்கு எதிராக நீதிமன் றம் கைது பிடியாணை பிறப்பிப் பதுடன், நீதிமன்றத்தில் குற்றப்பத் திரிகையும் தாக்கல் செய்ய வேண் டும். அதன்படி, நேற்று முன்தினம் (18.5.2024) பாலியல் வன்முறை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா வுக்கு எதிராக பெங்களூரு நீதிமன் றம் கைதுக்கான பிடியாணையைப் பிறப்பித்துள்ளது. அத்துடன் அவ ரது கடவுச்சீட்டை ரத்து செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே பிரஜ்வல் ரேவண் ணாவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள சிறப்புப் புலனாய்வு குழு காவல் துறையினர், அவரது கடவுச் சீட்டை ரத்து செய்வதற்கான நட வடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணா, எம். பி.யாக இருப்பதால், அவரிடம் டிப்ளோ மேடிக் கடவுச்சீட்டு உள்ளது. அந்த கடவுச்சீட்டை ரத்துசெய் யும்படி ஏற்கெனவே பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் சித்தரா மையா கடிதம் எழுதி இருந்தார்.

ஒன்றிய அரசுக்கு கடிதம்
ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா வின் கடவுச்சீட்டு ரத்து செய்யப் படவில்லை. தற்போது அவருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்டு பிறப்பித்திருப்பதால், அவரது கடவுச்சீட்டை ரத்து செய்ய கோரி ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்ய சிறப்புப் புலனாய்வு குழு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஓரிரு நாட்களில் பிரஜ்வல் ரேவண்ணா வழக்குகள் சம்பந்தப் பட்ட ஆவணங்களுடன், அவரது கடவுச்சீட்டை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசுக்கு காவல்துறையி னர் கடிதம் எழுத உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவு கள் வெளியாகும் முன்பே அவரை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய் வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கூறப் படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *