நாடு முழுவதும் பா.ஜ.க.விற்கு எதிராக மக்கள் எழுச்சி!

Viduthalai
1 Min Read

பிரியங்கா காந்தி பேட்டி!

புது­டில்லி, மே 20- பா.ஜ.க.வுக்கு எதி­ரான மக்­கள் எழுச்­சியை நாடு முழு­வ­தும் காண முடிந்­துள்ள­தாக காங்­கி­ரஸ் பொதுச் செய­லா­ளர் பிரி­யங்கா காந்தி தெரி­வித்­துள்­ளார்.
பிரி­யங்கா காந்தி அளித்­துள்ள சிறப்­புப் பேட்­டியை இந்­துஸ்­தான் டைம்ஸ் வெளி­யிட்­டுள்­ளது. அதில், நாடு முழு­வ­தும்உள்ள விவ­சா­யி­கள், தொழி­லா­ளார்­கள், நடுத்­தர வர்க்­கத்­தி­னர் என அனைத்து தரப்பு மக்­க­ளும் ஏரா­ள­மான பிரச்சி னை­களை சந்­தித்து வரு­வ­தா­க­வும், இப்­பி­ரச்­சி­னை­­ களுக்கு தீர்வு காண்­பது அர­சி­யல் அதி­கா­ரத்­தில் உள்­ள­வர்­க­ளின் கடமை என்­றும் கூறி­னார்.

ஆனால் மக்­க­ளின் எந்த பிரச்சினை­க­ளுக் ­கும் ஒன்­றிய ஆட்­சி­யா­ளர்­கள் தீர்வு காண­வில்லை என்­றும் தெரி­வித்த பிரி­யங்கா காந்தி, வளர்ச்­சியை நோக்­க­மா­கக் கொண்ட அர­சி­யலை மக்­கள் விரும்­பு­வ­தா­க­வும் கூறி­னார். ஒன்­றிய பா.ஜ.க. அரசு, மக்­க­ளின் பிரச்சினை­கள் குறித்து கவ­லைப்­ப­டா­மல், திசை திருப்­பும் பணி­க­ளில் ஈடு­பட்­டுள்­ள­தாக குற்­றம்­சாட்­டிய அவர், தான் சென்ற இடங்­க­ளில் எல்­லாம் பா.ஜ.க.வுக்கு எதி­ரான மக்­கள் எழுச்­சியை காண முடிந்­துள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.
காங்­கி­ரஸ் கட்­சி­யின் தேர்­தல் அறிக்கை குறித்து பிர­த­மர் மோடி­யின் விமர் ­ச­னங்­கள் குறித்த கேள்­விக்கு பதி­ல­ளித்­துள்ள பிரி­யங்கா காந்தி, காங்­கி­ரஸ்தேர்­தல் அறிக்­கையை முழு­மை­யாக படிக்­கா­மல் பிர­த­மர் மோடி கற்­ப­னை­யான குற்­றச்­சாட்­டுக்­களை கூறி வரு­வ­தா­க­வும், மக்­க­ளின் பிரச்சி னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்கு மாறாக மக்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டி­விட்டு அர­சி­யல் ஆதா­யம் காண வேண்­டும் என்­பதே பிர­த­ம­ரின் நோக்­க­மாக உள்­ள­தா­க­வும் விமர்­சித்­தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *