புதுடில்லி, மே 19- உயர் கல்வி நிறுவனங்களில் துணைவேந்தர் உள்ளிட்ட பதவிகளுக்கு அவசர நியமனம் ஏன் என ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப் பியுள்ளார்.
இது குறித்து சீத்தா ராம் யெச்சூரி வெளியிட்டுள்ள சமூக வலை தள பதிவில், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத் துக்கு அவசரகதியில் துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் திறன் மேம்பாட்டு நிறு வனத்துக்கு அவசர கதி யில் இயக்குநர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதி களை மீறி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு ஒன்றிய அரசு நேர் காணல் நடத்துகிறது என்றும், உயர்கல்வி நிறு வனங்களில் இந்துத்துவா கொள்கையை புகுத்தி இந்திய வரலாற்றை திருத்தி எழுத ஒன்றிய அரசு முயற்சிப்பதாக சீத்தாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் அவசர கதி யில் நியமிப்பது மோடி யின் தோல்வி பயத்தை காட்டுகிறது என, பதிவிட்டுள்ளார். ஒன்றிய பா.ஜ.க. அரசின் அத்து மீறிய நியமனங்கள் புதிய ஆட்சி அமைந்த பிறகு ரத்து செய்யப்படும் என வும் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சமூக வலை தளத்தில் பதிவிட்டுள் ளார்.