தமிழ்நாட்டுக்கு ரெட் எச்சரிக்கை – அடுத்து இரு நாள்களுக்கு கனமழை

viduthalai
5 Min Read

சென்னை, மே 19- தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று (19.5.2024) முதல் ‘ரெட் அலர்ட்’ எனப் படும் அதி கனமழையும், நாளை (20.5.2024) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கன முதல் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இவ்விரு நாள்களும் தூத்துக் குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப் உள் ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை விட வெப்ப நிலை குறைவாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 38.6கு செல்சியஸ் பதிவாகியுள்ளது. வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32 – 39கு செல்சியஸ் மற்றும் தென் தமிழ்நாடு உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 31கு- 32கு செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 29-32கு செல்சியஸ் மற்றும் மலைப் பகுதி களில் 19கு -27கு செல்சியஸ் பதிவாகியுள் ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 31.6கு செல்சியஸ் (-6.8கு செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 31.3கு செல்சியஸ் (-6.1கு செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அடுத்த சில நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
20.05.2024:

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல் வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

21.05.2024:
தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங் களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம் புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், புதுக்கோட்டை மதுரை, சிவ கங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர். பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக் குறிச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, இராமந £தபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22.05.2024:
தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் தேனி மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, விருது நகர், மதுரை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டி னம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

23.05.2024:
தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

24.05.2024:
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த நான்கு நாள்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 19.05.2024 முதல் 22.05.2024 வரை:
அடுத்த 4 நாள்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்ன லுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35கு செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 26கு செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:

19.05.2024:
குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளை குடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழ்நாடு கடலோரப்பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு-மாலத் தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத் திலும் வீசக்கூடும்.

20.05.2024:
குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழ்நட்டின் கடலோரப்பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கருநாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21.05.2024:
குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளை குடா, தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி களை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள் மற்றும் கேரள கருநாடக கடலோரப் பகுதிகளில் குறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத் திலும் வீசக்கூடும்

22.05.2024:
குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளை குடா, தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள், கேரள கருநாடக கடலோரப்பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி களில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற் குறிப்பிட்ட நாள்களில் மீனவர்கள் இப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படு கிறார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *