புதுடில்லி, மே 16- நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ் தாவை கைது செய்தது சட்ட விரோதம் எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், அவரை உடன டியாக விடுதலை செய்ய உத்தர விட்டுள்ளது.
சீனாவுக்கு ஆதரவான பிரச் சாரத்தை பரப்புவதற்காக பணம் பெற்றதாக பயங்கரவாத எதிர்ப் புச் சட்டமான யுஏபிஏவின் கீழ் கைது செய்யப்பட்ட பிரபீர் தரப்புக்கு ரிமாண்ட் மனுவின் நகலை கைதுக்கு முன்னதாக டில்லி காவல்துறையினர் வழங் காததால், இந்த கைது நடவ டிக்கை சட்டவிரோதமாக கருதி அவரை உடனடியாக விடுவிக்க நீதிபதிகள் பிஆர் கவாய், சந்தீப் மேத்தா அமர்வு உத்தரவு பிறப் பித்துள்ளது.
டில்லி காவல்துறையினர் பிரபீரை கைது செய்வதற்கு முன் னதாக அவரின் குடும்பத்தின ருக்கோ, வழக்குரைஞருக்கோ ரிமாண்ட் மனு கொடுக்கவில்லை என்பதால், இந்த கைது நட வடிக்கையை சட்டவிரோதமாக கருதி விடுவிக்க வேண்டும் என்று டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ஆனால், டில்லி காவல்துறையினரின் கைது நடவடிக்கையை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்றம், அவரை நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதித்தது.
இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிரபீர் தரப் பில் மேல்முறையீட்டு மனு தாக் கல் செய்யப்பட்டது.
அந்த மனுவின் விசாரணை கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நீதிபதிகள் பி.ஆர். கவாய், சந்தீப் மேத்தா அமர்வில் நடை பெற் றது. அப்போது, பிரபீர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட் டார். அக்டோபர் மாலை 7 மணிக்கு பிரபீர் கைது செய்யப் பட்ட நிலையில், அடுத்த நாள் காலை 6 மணிக்கு நீதிபதியின் இல்லத்துக்கு அழைத்துச் சென் றார். அதுவரை பிரபீர் குடும்பத் துக்கோ, வழக்குரைஞருக்கோ ரிமாண்ட் மனு வழங்கப்பட வில்லை என்று தெரிவிக்கப் பட்டது.
பிரபீர் தரப்புக்கு ரிமாண்ட் மனு அளிக்கப்படாமல் அவரை நீதிபதியிடம் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்தது குறித்து டில்லி காவல்துறை தரப்புக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன் றம், தீர்ப்பை ஒத்திவைத்தது.
இதனைத் தொடர்ந்து, டில்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதித்த உச்சநீதிமன்றம், காவல்துறையின் கைதை சட்ட விரோதமாக அறிவித்து, பிர பீரை உடனடியாக விடுதலை செய்ய இன்று (15.5.2024) காலை உத்தரவிட்டது.
2019 மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் செயல் முறையை சீர்குலைக்க, ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான மக்கள் கூட்டணி (பிஏடிஎஸ்) என்ற குழு வுடன் புர்காயஸ்தா சதி செய்ததா கவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அக்டோபர் 3- ஆம் தேதி புர்காயஸ் தாவுக்கு தொடர் புடைய டில்லியில் 88 இடங் களிலும், பிற மாநிலங்களில் 7 இடங்களிலும் சோதனை நடத் தப்பட்டது. இந்த சோதனையின் முடி வில் புர்காயஸ்தா, நியூஸ் கிளிக் நிறுவன மனிதவளத் துறைத் தலை வர் அமித் சக்ரவர்த்தி உள்ளிட் டோரை கைது செய்து விசாரணை நடத்திய காவல் துறையினர் யுஏபிஏ சட்டத்தின் கீழ் பதிவு செய்தனர்.