ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பாஜக பகல் கனவு காண்கிறது

viduthalai
1 Min Read

புவனேஸ்வர், மே 7 ஒடிசா வில் ஆட்சி அமைப்போம் என பாஜக பகல் கனவு காண்பதாக அம்மாநில முதல மைச்சர் நவீன் பட்நாயக் தெரி வித்துள்ளார். ஒடிசா மாநில சட்டசபைத் தேர்தலும் நாடா ளுமன்ற தேர்தலும் இரண்டு கட்டங்களாக வரும் மே 13 மற்றும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று ஒடிசாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்தார்
அப்போது பிரதமர் மோடி, “வரும் ஜூன் 4ஆம் தேதி பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாக போகிறது. நாங்கள் அன்று பாஜக சார்பில் முதலமைச்சர் யார் என்று அறிவிப்போம். பாஜக ஜூன் 10 ஆம் தேதி முதலமைச்சருடன் பதவி ஏற்க உள்ளது. பாஜக ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சி அமைக்கப் போகிறது.” என்று பேசினார். இவ்வாறு ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி பேசியதை விமர்சித்த அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பா.ஜனதா பகல் கனவு காண்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *