இரவு நேர மின்தடையை சரிசெய்ய 60 சிறப்பு நிலைக் குழு அமைப்பு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை,மே7– சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங் களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாகச் சரி செய்ய 60 சிறப்பு நிலை குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளன என தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலு வலகத்தில் இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மய்யமான மின்னகத்தில் தலைமை செய லாளர் சிவ் தாஸ் மீனா நேற்று (6.5.2024) ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறியதாவது:

மாநிலத்தின் மின்சாரத் தேவை மற்றும் மின் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை. மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், கோடை காலத் தில், மின்சார விநியோக பாதையில் உள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அவ்வப் போது ஏற்படும் பழுதுகள் காரணமாக ஏற்படும் மின் தடை கள் உடனுக்குடன் சரி செய்யப் பட்டு தடையில்லா, சீரான மின் சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
மின்னுற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து தினமும் கண்காணித்து வருகிறோம்.
மேலும், தேவைப்பட்டால் சொந்த உற்பத்தியைத் தவிர, வெளிச் சந்தையில் இருந்தும் மின் சாரம் வாங்கப்படுகிறது. இதன் மூலம், கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரவு நேரங்களில் மின் விநியோகப் பாதையில் உள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அவ்வப் போது ஏற்படும் பழுதுகளை உட னடியாகச் சரி செய்யும் பொருட்டு, 60 சிறப்பு நிலை குழுக்கள் அமைக் கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் விவசாய மின் இணைப்புகளின் பயன்பாடு அதிக மாக உள்ள காரணத்தால், ஒரு சில பகுதிகளில் உள்ள உயரழுத்த மின் பாதைகளில் சில இடையூறுகள் அவ்வப்போது ஏற்படுகிறது.

இத்தகைய இடையூறுகளை நிவர்த்தி செய்வதற்காக, போர்க் கால அடிப்படையில் மேம்பாட் டுப் பணிகள் நடைபெற்று வரு கின்றன.
தொடர்ச்சியாக மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி அதற் கான காரணத்தைக் கண்டறிந்து உட னுக்குடன் சரி செய்யுமாறும், பொதுமக்களிடமிருந்து பெறப் படும் புகார்கள் குறித்து உடனடி யாக நடவடிக்கை எடுக்குமாறும், தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.

இவ்வாறு தலைமைச் செய லாளர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *