ஜி 20 மாநாடு : வெளிநாட்டு தலைவர்கள் கண்களில் படாமல் ஏழை மக்களையும் விலங்குகளையும் ஒன்றிய அரசு மறைப்பதா? ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Viduthalai
1 Min Read

அரசியல்

புதுடில்லி, செப் 10 தற்போது வெளிநாட்டில் உள்ள காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘டில்லியில் ஏழை மக்களையும், விலங்குகளை யும் ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகள் கண்ணில் படாமல் மத்திய அரசு மறைக்கிறது. நம் நாட்டின் உண்மை நிலையை நமது விருந்தி னர்களிடம் மறைக்கத்தேவையில்லை’ என்று கூறியுள்ளார். 

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் ஆக்கப் பூர்வ கூடலாக இருக்க வேண்டும், உலக பிரச்சினைகளை ஒத் துழைப்போடு கையாள வேண்டும் என்பதே ஜி-20 மாநாட்டின் நோக்கம். இந்த மாநாட்டுக்கு ரஷ்ய அதிபர் புதின் வராமல் இருக் கலாம். இளவரசர் பொடம்கினின் (மேனாள் ரஷ்ய ராணுவ தலைவர். பிரதமர் மோடியை இவ்வாறு குறிப்பிடுகிறார்) கைங்கரியம் முழுமையாக வெளிப்பட்டுள்ளது. குடிசைப்பகுதிகள் துணிகளை கட்டி மூடி மறைக்கப்பட்டுள்ளன அல்லது இடித்து தள்ளப் பட்டுள்ளன. இதனால் ஆயிரக் கணக்கானவர்கள் வீடு இழந் துள்ளனர். தெருநாய்கள் போன் றவை குரூரமாக சுற்றிவளைக் கப்பட்டு, சித்ரவதை செய்யப்படு கின்றன. பிரதமர் மோடியின் மதிப்பை மெருகேற்றுவதற்கே இவ் வாறு செய்யப்படுகிறது’ என்று கூறியுள்ளார். டில்லியில் குடிசைப்பகுதிகள் துணியை கட்டி மறைக்கப்பட்டுள்ள  காட்சிப் பதிவில் தெருநாய்கள் போன்றவை பிடித்து இழுத்துச் செல்லப்படும் காட்சியையும் காங்கிரஸ் பகிர்ந்துள்ளது. மேலும் ஒரு காட்சிப் பதிவில் ‘அரசு எங்களை பூச்சிகளைப் போல கருது கிறது. நாங்கள் மனிதர்கள் இல் லையா?’ என்று ஒரு குடிசைவாசி கேள்வி கேட்பது இடம்பெற்றுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *