முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தீர்ப்பை செயல்படுத்த சாக்குப் போக்கு சொல்லும் கேரளா

1 Min Read

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

புதுடில்லி, மே 6- முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்புப் பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தர விட கோரி கேரளாவை சேர்ந்த ஜோ ஜோசப் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே அணையில் பரா மரிப்புப் பணிகளுக்கான பொருட் களை எடுத்துச்செல்ல வல்லக்கடவு-முல்லைப் பெரியார் காட்டுச்சாலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் இடை யீட்டு மனு தாக்கல் செய்துள் ளது.
இதனிடையே இந்த விவகாரத்தில் கேரள அரசின் முதன்மை செயலர் அசோக் குமார் சிங் சார்பில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழ்நாடு அரசின் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் காவிரி தொழில்நுட் பக்குழுவின் துணைத் தலைவர் எம்.செல்வராஜ் சார்பில் வழக்குரைஞர் டி.குமணன் உச்ச நீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய் துள்ளார். அதில், தீர்ப்பை அமல்படுத்த கேரளா சாக்குப் போக்கு சொல்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை நீதிபதிகள் ரிஷிகேஷ். ராய், பிரசாந்த் குமார் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (7.5.2024) விசாரிக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *