உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு
புதுடில்லி, மே 6- முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்புப் பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தர விட கோரி கேரளாவை சேர்ந்த ஜோ ஜோசப் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே அணையில் பரா மரிப்புப் பணிகளுக்கான பொருட் களை எடுத்துச்செல்ல வல்லக்கடவு-முல்லைப் பெரியார் காட்டுச்சாலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் இடை யீட்டு மனு தாக்கல் செய்துள் ளது.
இதனிடையே இந்த விவகாரத்தில் கேரள அரசின் முதன்மை செயலர் அசோக் குமார் சிங் சார்பில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழ்நாடு அரசின் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் காவிரி தொழில்நுட் பக்குழுவின் துணைத் தலைவர் எம்.செல்வராஜ் சார்பில் வழக்குரைஞர் டி.குமணன் உச்ச நீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய் துள்ளார். அதில், தீர்ப்பை அமல்படுத்த கேரளா சாக்குப் போக்கு சொல்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை நீதிபதிகள் ரிஷிகேஷ். ராய், பிரசாந்த் குமார் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (7.5.2024) விசாரிக்கிறது.