புதுடில்லி மே 6 தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக தலைவர் நட்டா மற்றும் கருநாடக மாநில பாஜக மூத்த தலைவர்கள் மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் கருநாடக பாஜக பதிவேற்றம் செய்த காட்சிப் பதிவு குறித்து கருநாடகா தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கருநாடக பாஜக தனது எக்ஸ் தள கணக்கில் பதிவேற்றம் செய்த காட்சிப் பதிவு ராகுல் காந்தி, முதலமைச்சர் சித்தரா மையா ஆகியோரின் அனிமேஷன் கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள் ளன. அதில் எஸ்.சி, எஸ்.டி, மற்றும் ஒபிசி பிரிவினர் கூண்டில் உள்ள முட்டைகள் போல் காட்டப் பட்டுள்ளனர். முஸ்லிம் சமுதாயம் என பெயரிடப்பட்ட பெரிய முட்டை ஒன்றை ராகுல் வைப்பது போல் காட்டப்பட்டுள்ளது. எஸ்.சி,எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவின் நிதியை பறித்து முஸ்லிம் சமுதாயத்தினருக்கு கொடுப்பது போல் அந்த அனிமேஷன் சித்தரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான நிதி ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டு முஸ்லிம் சமுதாயத்தினருக்கு வழங்கப்படும் என எங்கேயும் குறிப்பிடவில்லை. ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என எஸ்.சி, எஸ்.டிமற்றும் ஓபிசி பிரிவினரை தூண்டுவது போன்ற பாஜக காட்சிப் பதிவு வெளியிட்டிருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, இந்த காட்சிப் பதிவு வெளியானதற்கு காரணமான கருநாடக பாஜக அய்.டி பிரிவுக்கு தலைமை வகிக்கும் அமித் மால் வியா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு காங்கிரஸ் தனது புகாரில் தெரிவித்துள்ளது.