வளர்ச்சித் திட்டங்கள் பற்றி பேச கையில் சரக்கு இல்லை பிரிவினைவாதம் பேசுகிறார் மோடி! லாலு பிரசாத் சாடல்

viduthalai
1 Min Read

பாட்னா, மே 5- தேர்தல் பிரச்சாரங்களில் வளர்ச்சித் திட்டங்கள், வேலை வாய்ப்புகள் குறித்து பேசாமல், இந்து, இஸ்லாமியர், பிரிவினை வாதம் உள்ளிட்டவை குறித்தே பிரதமர் மோடி பேசி வருவதாக, பீகார் மேனாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலுபிரசாத் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், இந்தியில் ஏறக்குறைய ஒரு லட்சத்து 50 ஆயிரம் வார்த்தைகள்உள்ளன. இதேபோன்று, ஹிந்தி மொழி சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் 6 லட்சத்து 50 ஆயிரம் வார்த்தைகள் உள்ளன. ஆனால், நாட்டின் பிரதமராக உள்ள மோடியோ, தனக்கு விருப்பமான வார்த்தைகளான, பாகிஸ்தான், சுடுகாடு, இந்து, – இஸ்லா மியர், தாலி, கோவில் – மசூதி, மீன், கால்நடை, – எருமை போன்ற வார்த்தைகளையே, தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து பேசி வருவதாக விமர்சித்துள்ளார்.
இந்த வார்த்தைகள் அனைத்தும் நடந்து முடிந்த 2 கட்டத் தேர்தலில் மட்டுமே மோடி பயன்படுத்தியுள்ள தாகவும், மொத்தமுள்ள 7 கட்டத் தேர்தல் முடிந்த பிறகு இதே போன்று வெறுப்பு வார்த்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் லாலு பிரசாத் விமர்சித்து உள்ளார்.
வேலை வாய்ப்புகள், விவசாயிகள், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, வளர்ச்சி, முதலீடுகள், மாணவர்கள், அறிவியல், இளைஞர்கள் போன்ற வார்த்தைகளை தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி மறந்துவிட்டதாகவும் லாலு பிரசாத் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *