புதுடில்லி, மே 5- காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பதிவில், ‘‘மணிப்பூர் சரியாக 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி பற்றி எரியத்தொடங்கியது. ஒரு ஆண்டு ஆகிறது. அக்கறையற்ற மோடி அரசு மற்றும் திறமையற்ற பா.ஜ. அரசும் இணைந்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்துள்ளன. இரக்கமில்லாத பிரதமர் மோடி மாநிலத்தில் காலடி எடுத்து வைக்கவில்லை. இது அவரது தகுதியின்மை மற்றும் முழு அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. அவரது ஈகோ ஓர் அழகான மாநிலத்தின் சமூக கட்ட மைப்பை சேதப்படுத்தியுள்ளது. மணிப் பூரில் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் பா.ஜ. எவ்வாறு தங்களது வாழ்க்கையை துயர்மிகுந்ததாக மாற்றியது என்பது இப்போது தெரியவரும். மணிப்பூரில் தாங்கள் அழித்த எண்ணற்ற உயிர்கள் குறித்து பிரதமர் மோடிக்கும், அவரது அரசுக்கும் துளிகூட அனுதாபம் இல்லை என்பதை இந்திய மக்கள் இப் போது அறிந்து கொள்வார்கள். பா.ஜ.வால் மணிப்பூரின் இயல்பு நிலை, அமைதி பறிக் கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள் ளார்.