காங்­கி­ர­ஸின் தேர்­தல் அறிக்­கைக்கு மதச்­சா­யம் பூசு­வதா?

Viduthalai
1 Min Read

காங்­கி­ரஸ் கட்சி கண்டனம்

புதுடில்லி, ஏப். 27- டில்­லி­யில் உள்ள காங்­கி­ரஸ் கட்சியின் தலை­மை­ய­கத்­தில் கட்­சி­யின் பொதுச் செய­லர் ஜெய் ராம் ரமேஷ் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:
வேலை­யில்­லாத் திண்­டாட்­டம், விலை­வாசி உயர்வு, பொரு­ளா­தார சம­மின்மை ஆகிய முக்­கிய பிரச்சினை­க­ளின் அடிப்­ப­டை­யில் தேர்­தல் களத்­தில் செயல்­பட்டு வரு­கி­றது காங்­கி­ரஸ். மாறாக, பா.ஜ.க. உரு­வாக்­கிய ஆடு­க­ளத்­தில் நாங்­கள் ‘விளை­யா­ட’­­வி­ரும்­ப­வில்லை.
உண்­மை­யான பிரச்சினை­க­ளில் இருந்து மக்­க­ளின் கவ­னத்தை திசை திருப்ப பொய்­களை பரப்­பு­கி­றார் மோடி. ‘பொய்­மையே வெல்­லும்’ என்­பதே அவ­ரது தாரக மந்­தி­ரம். இட­ஒ­துக்­கீட்டை ஒழிக்க வேண்­டும் என்ற உள்­நோக்­கத்­துடன் மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பை அவ­ரது அரசுதவிர்த்து வரு­கி­றது.

காங்­கி­ர­ஸின் தேர்­தல் அறிக்­கைக்கு முத­லில் மத­வாத சாயம் பூசிய பிர­த­மர், இப்­போது அதில் இல்­லாத விஷடயங்­களை இருப்­ப­தாக பொய் பிரச்­சா­ரம் செய்­கி­றார். “மோடி­யின் உத்­த­ர­வா­தம்’ என்ற முழக்கத்தை கைவிட்ட அவர், மக்­களை பிளவு­ படுத்­தும் பேச்சு நடையை பயன்­ப­டுத்த தொடங்­கி­யுள்­ளார்.
சொத்து வாரி­சு­ரிமை வரி குறித்து தேர்­தல் அறிக்­கை­யில் எங்­கும் குறிப்­பி­டப்­பட­ வில்லை. இந்த வரியை ஒழித்­த­வர் மறைந்த மே­னாள் பிர­த­மர் ராஜீவ் காந்தி.அதே நேரம், மறைந்த பா.ஜ.க. மூத்த தலை­வர் அருண் ஜேட்லி, மற்­றொரு மூத்த தலை­வர் ஜெயந்த் சின்ஹா ஆகி­யோர் இந்த வரிக்கு ஆத­ர­வாக பேசி­யி­ருக்­கின்­ற­னர். உண்­மை­யில், சொத்து வாரி­சு­ரிமை வரியைஅம­லாக்க வேண்­டு­மென்­பது பா.ஜ.க.வின் கொள்கை என்­றார் ஜெய்­ராம் ரமேஷ்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *