கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஏப்.25- டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் முதலமைச் சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறை டில்லி அர சின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்படப் பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்தியா

கெஜ்ரிவாலுக்கு இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை அழைப்பாணை அனுப்பி யும் அவர் ஆஜராகவில்லை.
அழைப்பாணை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார் கடந்த மாதம் 20 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக் கைக்குத் தடை விதிக்க நீதி மன்றம் மறுத்து விட்டது.

எனவே, மது பான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த மாதம் 21ஆம் தேதி இரவு அமலாக்கத் துறை கைது செய்தது. தற்போது கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருடைய நீதிமன்றக் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந் தது. கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் திகார் சிறையில் உள்ள அவர் இன்று டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.

கெஜ்ரிவாலை மேலும் விசா ரிக்க வேண்டியுள்ளதால் அவரது நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டுமென அமலாக்கத்துறை தரப் பில் கோரிக்கை விடுக் கப்பட்டது.
கோரிக்கையை ஏற்ற டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாட் கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தர விட்டது.
அதாவது கெஜ்ரிவாலுக்கு வரும் மே 7ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் அமலாக் கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா மேனாள் முதல மைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகளான கவிதாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவருக்கும் மே 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை டில்லி ரோஸ் அவென்யூ நீதி மன்றம் நீட்டித்து உத்தரவிட் டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *