திகார் சிறையில் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் சந்திப்பு

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஏப். 25 டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பஞ்சாப் முதல மைச்சர் பகவந்த் சிங் மான், ஆம் ஆத்மி தேசிய பொதுச் செயலாளர் சந்தீப் பதக் ஆகியோர் கடந்த 15-ஆம் தேதி கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினர். இதன் பிறகு சந்தீப் பதக் கூறும்போது, “கெஜ்ரிவால் ஒவ்வொரு வாரமும் இரண்டு அமைச்சர்களை சந்தித்து அந்தந்த துறைகளின் கீழ் நடைபெறும் பணிகளின் முன்னேற் றம் குறித்து ஆய்வு செய்வார்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் டில்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கெஜ்ரிவாலை நேற்று (24.4.2024) சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் பேசினார்.
இதன் பிறகு சவுரப் பரத்வாஜ் கூறியதாவது: திஹார் சிறையின் முலகட் ஜங்லாவில் (கைதிகளை பார்வை யாளர்கள் சந்தித்துப் பேசும் இரும்பு தடுப்புடன் கூடிய அறை) கேஜ்ரிவாலை சந்தித்து அரை மணி நேரம் பேசினேன். கேஜ்ரிவால் தன்னைப் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். தான் திடகாத்திரமாக இருப்பதாவும் டில்லி மக்களின் ஆசியுடன் தனது போராட்டத்தை தொடர்வேன் என்றும் கூறினார்.
இவ்வாறு சவுரப் பரத்வாஜ் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *