முதல் கட்ட தேர்தலில் பிஜேபிக்கு பின்னடைவு பதற்றத்தால் மத வெறியை தூண்டி விடுகிறார் பிரதமர்!! நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி

1 Min Read

பெங்களூரு, ஏப்.24- முதல்கட்ட தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதால் பிரதமர் மோடி நடுக்கத்தில் மத வெறுப்பு கருத்துகளை பேசுவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூருவில் நேற்று (23.4.2024) செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பா.ஜனதாவுக்கு எதிராக ஒரு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் பிரதமர் மோடி நடுக்கத்தில் உள்ளார். இதன் காரணமாக இந்து-முஸ்லிம் குறித்து வெறுப்பு கருத்துகளை கூறியுள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய கருத்தில் தனக்கு தேவையான வார்த்தைகளை மட்டும் எடுத்து மோடி பேசியது சரியல்ல.

தேர்தல் நடத்தை விதிமுறைகளில், ஜாதி-மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதை கண்டு கொள்ளாமல் பிரதமர் பேசியது விதிமீறல் இல்லையா? இதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய தேர்தல் ஆணையத்திற்கு காது, கண், மூக்கு இருப்பதுபோல் தெரியவில்லை. 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று மோடி கூறுகிறார்.

அப்படி என்றால் எதற்காக இந்து-முஸ்லிம் குறித்து மத வெறுப்பு கருத்துகளை பேசுகிறார். அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதை இது காட்டுகிறது. மோடியின் இந்த வெறுப்பு கருத்து ஒட்டு மொத்த உலகிற்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் மாற்றத்திற்கான காற்று வீசுகிறது. சூரத்தில் காங்கிரஸ் வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டு பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். இது என்ன நியாயம்?

10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ள பிரதமர் மோடி தனது சாதனைகளை சொல்லி வாக்குசேகரிக்க வேண் டியது தானே. அதை விடுத்து மத வெறுப்பு கருத்துகளை கூறுவது ஏன்?. 2015 ஆம் ஆண்டு 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதாக கூறினார்கள். அதில் 10 ஸ்மார்ட் நகரங்களையாவது உருவாக்கினார்களா? ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக் குவதாக மோடி கூறினார். வேலை வாய்ப்புகளை உருவாக்கினாரா?
-இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *