சிதம்பரம் மாவட்டம் முழுவதிலும் பெரியார் படம் வைத்து கழகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி

2 Min Read

கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

அரசியல்

புவனகிரி, செப். 14 கடலூர் மாவட்டம் சிதம்பரம் கழக மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் பெரியார் படம் வைத்து மாலை அணிவித்து கழகக் கொடியேற்று நிகழ்ச்சி, தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது என கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த கலந்துரையாடல் கூட் டம் குமாரக்குடி துறை மீனாட்சி சுந்தரம் நினைவு வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் மழவை கோவி.பெரியார்தாசன், மாவட்ட இணை செயலாளர் யாழ் திலீபன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நெடுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்தநாள் தேசிய திரு விழாவாக கழகத் தோழர்கள் கொண்டாட வேண்டும். அன்று பொது இடங்களில் தந்தை பெரியார் அவர்களின் படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். இதில் அனைத்து கட்சியினரையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் மற்றும் மற்ற விழாவை போல பெரியார் பிறந்த நாளை ஒரு திருவிழாவாகவே கொண்டாட வேண்டும். புத்தாடை உடுத்தி கழகக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் சிதம்பரம் கழக மாவட்டத்தில் தந்தை பெரியார் படத்தை டாட்டா ஏசி வாகனத்தில் அலங்கரித்து மாலை அணிவித்து மாவட்ட முழுவதும் உள்ள கழகத் தோழர்கள் இருக்கும் ஊர்களுக்கு சென்று கழகக் கொடி ஏற்றுவது, விளம்பரப்படுத்துவது என்ற தீர் மானம் இயற்றப்பட்டது மேலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தும், 17.9.2023 அன்று பாளையங்கோட்டையில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப் பட்டது.

இதில் மாவட்ட அமைப்பாளர் தென்னவன், திருமுட்டம் ஒன்றிய தலைவர் பெரியண்ணசாமி, காட் டுமன்னார்கோயில் ஒன்றிய செய லாளர் முருகன், காட்டுமன்னார் கோயில் நகர செயலாளர் பஞ்சநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பஞ்சநாதன், பாளை யங்கோட்டை தமிழரசன், ராஜ சேகர் ஆகியோர் கலந்து கொண் டனர்.

இறுதியாக பொதுக்குழு உறுப் பினர் சுமதி பெரியார்தாசன் நன்றி யுரை ஆற்றிட, கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *