பெரம்பலூர், ஏப்.20— – தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா, தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித் தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களி டம் பேசுகையில், “தமிழ்நாடு அரசின் சாதனைகள், பாசிச பாஜக அரசின் உளவியல் ஆகியவற்றை தேர்தல் களத்தில் பார்க்க முடிகிறது. ஜாதி, மதம், ஊழல் கூட்டணி தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. பாஜக தமிழ் நாட்டில் கால் பதிக்க நினைத் தார்கள். ஆனால் பாஜக கூட்டணியை முறியடிக் கும் வகையில் முதலமைச்சரின் பிரச் சாரம் அமைந்தது. இன்றைக்கு இந்தி யாவே அவர்களின் கையை விட்டுப் போகிறது” என்றார்.
இந்தியாவே பா.ஜ.க.வின் கைவிட்டுப் போகிறது! ஆ. இராசா பேட்டி

Leave a Comment