சென்னை, ஏப்.18 பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட் பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்து இருந்தார். மனு வில், ‘‘சென்னை தாம்பரம் ரயில் நிலை யத்தில், 4 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக, பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும்படி, அமலாக்கத் துறையில் மனு அளித்துள்ளேன்.
பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந் திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கும், தகுதி நீக்கம் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்க, தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18.4.2024)) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், ‘‘நயினார் நாகேந்திரன் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அடிப்படையில் அடுத்தக் கட்ட நட வடிக்கை எடுக்கப்படும்” என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.