கருத்துக்கணிப்பு மூலமாக ஏமாற்றுகிறார் மோடி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

Viduthalai
1 Min Read

மைசூரு,ஏப்.2- கருநாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான‌ சித்தராமையா மைசூருவில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் நிலவரம் குறித்து பாஜகவினர் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ரகசிய கருத்துக்கணிப்பு மேற்கொண்டனர். அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறுவதே கடினம் என தெரியவந்தது. அதனை மறைத்து 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாஜகவினர் பேசி வருகின்றனர். கடந்த ஆண்டு கருநாடக சட்டப்பேரவைத் தேர்த‌லில் பாஜக 200 இடங்களில் வெற்றி பெறும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக கூறினார். கர்நாடகாவிலேயே முகாமிட்டு தொகுதிவாரியாக பிரச்சாரம் செய்தார். ஆனால் பாஜக படுதோல்வி அடைந்து, காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது என்று கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *