இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை ஆளுநர் பதவி ஒழிக்கப்படும் என்று அறிவிப்பு

2 Min Read

சென்னை, ஏப்.2– நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அங்கம் வகிக்கிறது. இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி 31.3.2024 அன்று சென்னை தியாக ராய நகரில் நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தர சன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல் லகண்ணு வெளியிட, தேசிய நிர் வாகக்குழு உறுப்பினர் சி.எச்.வெங் கடாச்சலம் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய இரா.முத்தர சன், “அரசமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட அமலாக்கத் துறை, வருமானவரித்துறை போன் றவற்றை பயன்படுத்தி பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை ஒடுக்கி வருகி றார்.
பா.ஜனதாவுடன் கூட்டணி வைத் துள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னம் ஒதுக்கும் தேர்தல் ஆணை யம், எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காமல் காலதாமதம் செய்கி றது. தேர்தல் ஆணையம் நடுநிலை யான தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் கேள்விக்குறியாகி வருகிறது. ஒரு சில தீர்ப்புகளுக்கு பிறகு நீதிபதிகள் ஆளுநர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நடைபெறுகிற மக்களவைத் தேர்தல் சர்வாதிகாரத்திற்கு எதி ரான யுத்தம். அரசமைப்பு சட் டம், ஜனநாயகம் காக்கும் போரில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” என்று அவர் கூறினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற் றுள்ள முக்கிய அம்சங்கள் வரு மாறு:-
வேளாண்துறைக்கு தமிழ் நாட்டை போன்றே தேசிய அளவில் தனி பட் ஜெட் வெளியிடப்படும். அரசமைப்பு சட்டத்தை திருத்தும் வேலை செய் யும் உரிமை அடிப்படை உரிமை யாக்கப்படும். ஒன்றிய அரசு கொண்டு வந்த 4 தொழிலாளர் சட்டத் தொகுப் புகள் ரத்து செய் யப்படும். அக்னிபாத் திட்டம், நிட்டி ஆயோக் போன்றவை ரத்து செய் யப்படும்.
திட்ட கமிஷன் மீண்டும் கொண்டு வரப்படும். சிறுபான்மை ஆணையத் திற்கு அரசமைப்பு சட்ட தகுதி வழங்கப்படும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும். ஆளுநர் பதவி ஒழிக்கப்படும். பொதுப்பட்டியலில் உள்ள பொருள் கள் குறித்து முடிவெடுக்கும் முன் மாநில அரசுகளுடன் கலந்தாலோ சிக்கப்படும். காஷ்மீர் பிரிக்கப்பட் டது ரத்து செய்யப்படும். -இவ்வாறு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *