5-4-2024 அன்று இரவு 8 மணிக்கு பொள்ளாச்சி தொகுதி உடுமலைப்பேட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட முன்னேற்பாட்டிற்காக 27.3.2024 அன்று திருப்பூர் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாதன், உடுமலைப்பேட்டை நகர செயலாளர் வேலுச்சாமி. ஆகியோரை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, தாராபுரம் கழக மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஜெ.தம்பிபிரபாகரன், நகர தலைவர் கலையரசன், மாவட்ட ப.க தலைவர் துங்காவி வெங்கடாசலம் ஆகியோர் சந்தித்து பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தவும், அதன் வழிமுறைகளையும் எடுத்துரைத்தனர். சிறப்பான முறையில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திடுவோம் என்று திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள் உறுதியளித்தனர்.
உடுமலைப்பேட்டையில் தி.மு.க. பொறுப்பாளர்களுடன் சந்திப்பு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books