முத்திரைத் தாள்களின் வித்தியாசம் தெரியாத பா.ஜ.க. அண்ணாமலை

1 Min Read

எப்படி மக்களின் பிரதிநிதியாக செயல்பட முடியும்?
மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி., கேள்வி

சென்னை, மார்ச் 30- இந்திய நீதித்துறைக்கு அல்லாத முத்திரைத்தாளுக்கும், நீதிமன்றங்களில் பயன் படுத்தப்படும் இந்தியா நீதிமன்ற கட்டண முத்தி ரைத்தாளுக்கும் வித்தியா சம் தெரியாத அண்ணா மலை எப்படி மக்களின் பிரதிநிதியாக செயல்பட முடியும் என மூத்த வழக் குரைஞர் திமுக மாநிலங் களவை உறுப்பினர் பி. வில் சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட் டுள்ள வில்சன், தமிழ் நாட்டில் உள்ள ஒரு அரசியல்வாதி, மற்றவர் களை “UPSC தேர்வு எழுத முடியுமா என சவால் விடுவதாகவும் மேலும் அவர் ஒரு அய்.பி.எஸ். அதிகாரி என்று அடிக் கடி பெருமை பேசுவதா கவும் குறிப்பிட்டுள்ளார்.
India Non Judicial  முத்திரைத்தாளுக்கும், நீதிமன்றங்களில் பயன் படுத்தப்படும் India Court Fee முத்திரைத்தாளுக்கும் வித்தியாசம் தெரியாத அய்பிஎஸ் அதிகாரியா அவர்? எனவும் இப்படிப் பட்ட நபர் கோவை மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் எப்படி பணியாற்ற முடி யும்? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
முத்திரைத்தாள்க ளின் வித்தியாசத்தை தெரியாத ஒருவர் சட்டங் கள் மற்றும் கொள்கை களை நிறைவேற்றுவதில் எவ்வாறு திறம்பட பங் காற்ற முடியும்? என்றும் வில்சன் பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *