புதுச்சேரியில் பிஜேபி சார்பில் நமச்சிவாயம் வேட்பு மனு எதிர்ப்பால் சிக்கல்

1 Min Read

புதுச்சேரி, மார்ச்.29- புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க.வில் தமிழ்வேந் தன், நாம் தமிழர் கட்சியில் டாக்டர் மேனகா உள்பட 34 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர்.
நேற்று (28.3.2024) வேட்புமனு பரிசீலனை நடந்தது. அப்போது அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவி பெயரிலான சொத்து விவரங்களை பிரமாணப் பத்திரத்தில் காட்டவில்லை. அவர் அமைச்சராக இருந்து தேர்தலில் போட்டியிடக் கூடாது.

அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று சுயேச்சை வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி னார். ஆனால் அமைச்சராக இருந்து தேர்தலில் போட்டியிட சட்டத்தில் இடம் உள்ளது என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் குலோத்துங்கன் கூறினார்.
மேலும் சொத்து விவரங்களை மறைத்திருந் தால் அதுதொடர்பான ஆவணங்களை தருமாறு கூறினார். ஆனால் ஆவணங்கள் எதுவும் வழங் கப்படாததால் அமைச்சர் நமச்சிவாயத்தின் மனு ஏற்கப்பட்டது. இதேபோல் காங்கிரஸ் வேட்பா ளர் வைத்திலிங்கம் அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்பட 27 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. போதிய ஆவணங்கள் இணைக்கப்படாதது உள்பட பல்வேறு கார ணங்களுக்காக 7 சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *