புதுடில்லி,மார்ச் 28- மதுபானக் கொள்கை வழக்குத் தொடர்பாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21.3.2024 அன்று அமலாக்கத்துறையால் கைது செய் யப்பட்டார். இதனைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் 7 நாட்களாக டில்லி யில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 26.3.2024 அன்று பிரதமர் இல்லத்தை முற்று கையிட்டும் போராட்டம் நடத்தி, கைதானார்கள்.
இந்நிலையில், டில்லி மதுபான முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (28.3.2024) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சுனிதா கூறுகையில், “இரண்டு நாட்களுக்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியின் தண்ணீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினை தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் அதிஷிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் ஒன்றிய அரசு அதிஷிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளது. பாஜக டில்லியை அழிக்க நினைக்கிறார்களா? மக்கள் தொடர்ந்து துன்பத்தில் தவிக்க வேண்டும் என்று விரும்பு கிறார்களா என்ன? மதுபான கொள் கையில் ஊழல் நடந்ததாகத் தொடரப் பட்ட வழக்கில் அமலாக்கத்துறை சுமார் 250-க்கும் அதிகமான சோதனைகளை நடத்தியுள்ளது.
ஊழல் எனச் சொல்லி அவர்கள் பணத்தைத் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எதையும் கண்டு பிடிக்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 28 அன்று நீதிமன்றத்தில் அனைத் தையும் வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்தார். மதுபான ஊழல் வழக்கின் பணம் எங்கே சென்றது என்பதைத் தெரிவிப்பார். அனைத்து ஆதாரங்களையும் அவர் அளிப்பார்” என சுனிதா கெஜ்ரிவால் பேசினார்.
கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் இன்று (28.3.2024) நிறைவு பெறும் நிலையில், டில்லி நீதிமன்றமும் விசா ரணை நடத்த உள்ளது. இதனால் கெஜ்ரிவாலுக்கு மேற்கொண்டு காவல் நீட்டிக்கப்படுமா? இல்லை பிணை தரப்படுமா? என பல்வேறு எதிர் பார்ப்புகள் கிளம்பியுள்ளது.
அமலாக்கத்துறைக்கு தாக்கீது
அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் எனக் கூறி கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு டில்லி நீதிமன்றத்தில் நேற்று (27.3.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவர்ண காந்த சர்மா, கெஜ்ரிவால் கைது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என அமலாக்கத் துறைக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டார்.
டில்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி போராட்டம்
கெஜ்ரிவால் கைதை கண்டித்து நேற்று (27.3.2024) டில்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத் தினர். மஞ்சள் நிற டி-சர்ட் மற்றும் கெஜ்ரிவாலின் முகமூடியை அணிந்து போராட்டம் நடத்திய ஆத் ஆத்மி கட்சி உறுப்பினர்கள், மோடி அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய தால் அவை நடவடிக்கைகள் 15 நிமி டங்கள் ஒத்தி வைக்கப்பட்டன.
கெஜ்ரிவாலுக்கு
உடல்நலக் குறைவு
அமலாக்கத்துறை காவலில் உள்ள டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என ஆம் ஆத்மி கட்சி தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கையில், “டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அவரது உடல்நிலை சீரற்ற நிலையில் உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.