டில்லி, மார்ச் 27– டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலைக் கண்டு பா.ஜ.க. அச்சமடைந்து உள்ளதாக பஞ்சாப் முதலமைச் சர் பகவந்த் மான் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து செய்தி நிறுவ னம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்,
கெஜ்ரிவால் கைது செய்யப் படுவார் என்று நாங்கள் ஆரம் பத்திலிருந்தே கூறி வருகிறோம். கெஜ்ரிவால் போன்ற பெரிய தலைவர் பிரச்சாரம் செய்வதை அவர்கள் (பாஜக) விரும்ப வில்லை.
மக்களவைத் தேர்தலில் கெஜ் ரிவால் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கவே அவரை ஒன்றிய பாஜக அரசு கைது செய்துள்ளது.
அவரைப் பார்த்து பாஜக பயப்படுகிறது. எனவேதான், அவரையும், ஆம் ஆத்மி கட்சி யையும் அழிக்க விரும்புகிறார் கள்.
அரசியல் ரீதியால் பழி வாங் கும் நோக்குடனேயே கெஜ்ரி வால் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. ஏற் கெனவே கைது செய்யப்பட் டுள்ள சரத் ரெட்டி, கெஜ்ரிவா லைச் சந்திக்கவே இல்லைஎன்று முதலில் கூறியிருந்தார்.
சிறையில் விசாரணை நடத் தியபோது கெஜ்ரிவாலை சந் தித்து உள்ளதாக சரத் ரெட்டி கூறியுள்ளார். தற்போது தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு சரத் ரெட்டி ரூ.55 கோடி கொடுத்திருப்பது அம்பலமாகி உள்ளது.
கெஜ்ரிவாலுக்கு எதிரான விசாரணை அமைப்பின் குற் றச்சாட்டுகள் உண்மையற் றவை மற்றும் நிரூபிக்கப் படா தவை.
-இவ்வாறு பஞ்சாப் முதல மைச்சர் பகவந்த் மான் குறிப் பிட்டுள்ளார்.