நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு

viduthalai
1 Min Read

அரசியல், இந்தியா

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட சிறப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், அவர்கள் இன்று (24.03.2024) சென்னை மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் அருகில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ரஷ்மி சித்தார்த் ஜகடே (சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்), ஷரண்யா அரி (துணை ஆணையாளர் (கல்வி), தேர்தல் நடத்தும் அலுவலர்/ மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) ச.சுரேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *