டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்

1 Min Read

புதுடில்லி,மார்ச் 23- ஒன்றிய அரசால் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் (21.3.2024) டில்லியில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தலை நகர் டில்லியில் விடிய விடிய போராட்டம் நடத்தினர். நேற்றும் (22.3.2024) இந்த போராட்டம் தொடர்ந்தது டில்லியில் உள்ள அய்.டிஓ கூட்டுரோட்டிலும், பா.ஜனதா அலுவலகம் அமைந்துள்ள தீனதயாள் உபாத்தியாயா சாலையிலும், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். முன்ன தாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. இதனை மீறி அதிஷி உள்ளிட்ட டில்லி மாநில அமைச்சர்களும், கட்சியினரும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜனதாவுக்கு எதிராக அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

பஞ்சாப் முதலமைச்சர் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், டில்லி அமைச் சர் அதிஷி உள்ளிட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதே போல் சத்தீஷ்காரின் ராய்ப்பூர், குஜராத்தின் மதர் பாத், பஞ்சாப் மாநிலங்களில் போராட் டம் நடந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *