“பாரத மாதாவின் பூஜாரி” என கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி அவர்களே

1 Min Read

“என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தாயும், ஒவ்வொரு மகளும் ‘சக்தி’யின் ஒரு வடிவம். தாய்மார்களே, சகோதரிகளே, நான் உங்களை ‘சக்தி’ என்று வணங்குகிறேன். நான் பாரத் மாவின் ‘பூஜாரி’”

– பிரதமர் நரேந்திர மோடி

1. டில்லியில் உங்கள் வீட்டு வாசல் அருகே நீதி கேட்டு, மல்யுத்த பெண் வீராங்கனைகள் அடித்து, துன்புறுத்தப்பட்டனர். அவர்கள் ’சக்தி’ இல்லையா?
2. கதுவா, உன்னாவ், ஹத்ராஸ் ஆகிய இடங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்களே, அவர்கள் ’சக்தி’ இல்லையா?
3. மணிப்பூரில் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, நிர்வாணமாக ஊர்வலம் நடத்தப்பட்டனரே. அவர்கள் ’சக்தி’ இல்லையா?
4.கான்பூரில் இரண்டு மைனர் சிறுமிகள் தூக்கிலிடப் பட்டனர். அவர்கள் ’சக்தி’ இல்லையா?
“பாரத மாதாவின் பூஜாரி என கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி அவர்களே. இந்த ”சக்திகளுக்கு” நடந்த கொடுமைகள் குறித்து ஏன் மவுன விரதம் உள்ளீர்கள், என்பதை இப்போதாவது நாட்டுக்கு கூறுங்களேன்.
– கோ.கருணாநிதி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *