பாங்க் ஆஃப் இந்தியாவிடம் கடன் வாங்கி வெளிநாடு தப்பிய நீரவ் மோடி 80 லட்சம் டாலர் கொடுக்க வேண்டும் லண்டன் உயர்நீதிமன்றம் ஆணை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

லண்டன், பிப்.12 வைர வியாபாரி நீரவ் மோடி, பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் 80 லட்சம் டாலர் ஒப்படைக்கும்படி லண்டன் உயர் நீதிமன்றம் நேற்று (10.3.2024) உத்தரவிட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய ரூ.13,500 கோடி கடனை வைர வியாபாரி நீரவ் மோடி திருப்பிச் செலுத்தாமல் 2018இ-ல் லண்டன் தப்பிச் சென் றார். இதையடுத்து, அவர் மீது சிபிஅய், அமலாக்கத் துறை வழக் குப் பதிவு செய்தன. லண்டனில் நடைபெற்ற நீதிமன்ற விசார ணைக்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக நீரவ் மோடி சிறை தண்டனை அனுபவித்து வரு கிறார். தற்போது அவர் லண்டனில் உள்ள தேம்ஸைட் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

முன்னதாக, துபாயில் உள்ள தனக்கு சொந்தமான ஃபயர் ஸ்டார் வைர டைமண்ட் நிறுவ னத்துக்காக பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் 90 லட்சம் டாலர் கடனாக நீரவ் மோடி பெற்றிருந் தார். அதனையும் 2018-ஆம் ஆண்டில் செலுத்துவதாக அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றாமல் வங்கியை ஏமாற்றிவிட்டார்.

இந்நிலையில், லண்டன் உயர் நீதிமன்றத்தில் பாங்க் ஆஃப் இந்தியா மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், நீரவ் மோடிக்கு சொந்தமான ஃபயர் ஸ்டார் வைர டைமண்ட் துபாய் நிறுவனத்தின் மூலமாக தங்களுக்கு சேர வேண் டிய 80 லட்சம் டாலர்களை மீட் டுத்தரும்படி கோரிக்கை வைத்தது.

இந்த மனுவை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு சொந்தமான எந்த வொரு நிறுவனத்தையும் ஏலம் விட்டு அல்லது விற்று தங்களுக்குச் சேர வேண்டிய தொகையை பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மீட்டுக் கொள்ளலாம் என்று உத்தரவிட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *