தேர்தல் பத்திர விபரம் தொடர்பான வங்கி அறிக்கை ஒரே சொடுக்கில் பெறக்கூடிய தகவலுக்கு ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் கேட்பதா? ராகுல் காந்தி கேள்வி

2 Min Read

புதுடில்லி, மார்ச் 5- தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடக் கால அவகா சம் கோரியதற்குக் காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா
கடந்த மாதம் தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த கருத்தாகத் தீர்ப்பு வழங்கினர். பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரங்கள் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இது வரை வழங்கிய பத்திரங் கள் தொடர்பான விவரங் களை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு தெரி விக்க வேண்டும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணை யம் மார்ச் 13-ஆம் தேதிக் குள் இதுதொடர்பான விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்த னர்.

இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவ ரங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கக் கோரி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.அய்.) உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், அரசியல் கட்சிகளால் பணமாக்கப் படும் தேர்தல் பத்திரங் க ளின் விவரங்களை வெளி யிடக் கூடுதல் அவகாசம் தேவை என்று ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைத்தளத்தில், “நன்கொடை வியாபா ரத்தை மறைக்க நரேந்திர மோடி தன்னால் இயன்ற வரை முயல்கிறார். தேர் தல் பத்திரங்கள் குறித்த உண்மையைத் தெரிந்து கொள்வது நாட்டு மக்க ளின் உரிமை என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ள நிலையில், இந்தத் தகவ லைத் தேர்தலுக்கு முன் பகிரங்கப்படுத்தக் கூடாது என்று ஸ்டேட் வங்கி . ஏன் விரும்புகிறது? ஒரே சொடுக்கில் பெறக் கூடிய தகவலுக்கு ஜூன் 30ஆம் தேதி வரை அவ காசம் கேட்டால் பருப்பு களில் கருப்பு எதுவும் இல்லை, முழு பருப்பு களும் கருப்பு என்று காட்டுகிறது. நாட்டின் ஒவ்வொரு சுதந்திர அமைப்பும் ‘மோதானி குடும்பமாக’ மாறி தங்கள் ஊழலை மறைக்க முயல் கின்றன. தேர்தலுக்கு முன் மோடியின் உண்மை யான முகத்தை மறைக்க இதுவே கடைசி முயற்சி” என்று பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *