பெரியார் சிந்தனைகளை பரப்பும் வகையில் கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி-பரிசளிப்பு விழா

1 Min Read

கன்னியாகுமரி,பிப்.27- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டி செண்பகராமன்புதூரில் எம்.இ.டி. கல் வியல் கல்லூரியில் “பெரியாரும் பெண்ணுரிமையும்”, “பெரியார் ஒரு தொலைநோக்காளர்”, “பெரியார் அறிவியல் பார்வையும் அணுகுமுறையும்” ஆகிய தலைப்புகளில் நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லூரி செயல் அதிகாரி கோ.மகாதேவன் தலைமையில் நடைபெற்றது. கழக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தொடக்கவுரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு மாணவ, மாண வியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கல் லூரி நிர்வாகம் சார்பாகவும் பரிசுகள் வழங்கப்பட்டன. கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம்; துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறீலதா(கல்லூரி முதல்வர்) தமிழ் பேராசிரியை பெனில் மற்றும் அதிகமான மாணவ, மாண வியர்கள் இந்த பரிசளிப்பு நிகழ்சியில் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *