‘இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்க!’ ராமேசுவரத்தில் இருந்து பாம்பன் வரை மீனவர்கள் பேரணி

viduthalai
2 Min Read

ராமேசுவரம், பிப்.21 இலங்கைச் சிறையில் சிறையில் உள்ள மீனவர் களை விடுதலை செய்யக் கோரி, ராமேசுவரத்திலி ருந்து பாம்பன் வரை நேற்று (20.2.2024) மீன வர்கள் பேரணி நடத் தினர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 3-ஆம் தேதி ராமேசுவரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை யும், அவர்களது 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித் தது. கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 பேரை விடுதலை செய்த ஊர்க் காவல் துறை நீதிமன்றம், 2-வது முறையாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மெல்சன் என்பவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 2 படகுகளின் ஓட்டுநர் களுக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்தது.

இதைக் கண் டித்தும், மீனவர்களின் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரியும் ராமேசுவரத்தில் விசைப் படகு மீனவர்கள் கடந்த 17-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் (19.2.2024) தமிழ்நாடு மீனவப் பிரதிநிதிகள், டில்லியில் ஒன்றிய மீன் வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து, இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடு தலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத் தினர். வேலைநிறுத்தத் தின் 4-ஆவது நாளான நேற்று ராமேசுவரம் மீன் பிடி இறங்குதளத்திலிருந்து பேரணியாகச் சென்று, ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டுப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந் தனர். அதன்படி நடை பெற்ற இந்தப் பேரணியில் பெண்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.

பேரணி பாம்பனை அடைந்த போது, ராமநாதபுரம் ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் மீனவர்களை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத் தினார். அப்போது, மீன வர்களை விரைவில் விடு தலை செய்ய அனைத்து நடவடிக்கைகளும் ஒன் றிய, மாநில அரசுகள் மூலம் மேற்கொள்ளப் படும் என்று அவர் உறுதி அளித்தார்.
இதையடுத்து, ஆட் சியர் அலுவலகத்தை முற் றுகையிடும் போராட் டதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மீன வர்கள் அறிவித்தனர். மேலும், தமிழக மீனவர் களை விடுதலை செய்யா விட்டால் வரும் 23, 24-ஆம் தேதிகளில் நடை பெற உள்ள கச்சத் தீவு திருவிழாவை புறக் கணிக்கப் போவதாகவும், மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டமும் தொடர்ந்து நடைபெறும் என்றும் மீன வர்கள் அறிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *