கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்களிடையே மூடநம்பிக்கையை ஒழித்து, நல் ஒழுக்கம் மேற்கொள்ளவும் பகுத்தறிவு சமூகநீதி சிந்தனையை வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு சனி, ஞாயிறுகளில் தமிழ்நாடு முழுவதும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளை கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், ஒருங்கிணைத்து வருகிறார். அந்த வகையில் திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற 43ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் சான்றிதழ்களை வழங்கினர். (திருச்சி – 18.2.2024)