மகாராட்டிரா: தேர்தல் குறித்து பள்ளிக் குழந்தைகளை மிரட்டிய சட்டமன்ற உறுப்பினர்

viduthalai
2 Min Read

ஹிங்கொலி, பிப்.13 மகாராட்டிர சிவசேனா சட்ட மன்ற உறுப்பினர் சந்தோஷ் பாங்கர் தேர்தல் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலை மையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடை பெற்று வருகிறது. இக்கட்சியைச் சேர்ந்த களம்நூரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சந்தோஷ் பாங்கர் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளிக்குச் சென்றபோது, அங்குள்ள பள்ளி மாணவர்களிடம் “அடுத்த தேர்தலில் உங் கள் பெற்றோர் எனக்கு வாக்களிக்கவில்லை என் றால், இரண்டு நாள்களுக்கு சாப்பிட வேண்டாம்” என்று கூறுவதுபோல் எடுக்கப்பட்ட ஒரு காட்சிப் பதிவு வைரலானது.

அதில் 10 வயதுக்கும் குறைவான மாணவர் களிடம், அவர்கள் சாப்பிட மறுப்பதற்கான கார ணம் குறித்து பெற்றோர் கேள்வி கேட்டால், “சந் தோஷ் பாங்கருக்கு வாக்களியுங்கள், அப்போது தான் நாங்கள் சாப்பிடுவோம்” என்று பதில் சொல் லுங்கள் என்று பாங்கர் கூறுவதுபோல் உள்ளது. இதற்கு காங்கிரஸ் மற்றும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உள்ளனர்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ கூறு கையில், “பாங்கர் பள்ளிக் குழந்தைகளி டம் கூறியது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிரானது. எனவே அவர் மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண் டும்” என்று கூறியுள்ளார். இதுபோன்ற சர்ச்சைகள் பாங்கருக்குப் புதிதல்ல. கடந்த மாதம், 2024 மக்களவைத் தேர் தலுக்குப் பிறகு நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வராவிட்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு விழாப் பேரணியின்போது வாளைக் காட்டி மிரட்டியதாக களம்நூரி காவல் நிலைய காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் குழந்தை களை ஈடுபடுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்த ஒரு வாரத்திற்குள் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *