குமரி மாவட்ட பகுத்தறிவாளர்கழகம் நடத்திய பேச்சுப்போட்டி கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பங்கேற்பு

1 Min Read

செண்பகராமன்புதூர், பிப். 9- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சு போட்டி செண்பகராமன்புதூரில் எம்.இ.டி. கல்வியல் கல்லூரியில் “பெரியாரும் பெண்ணுரிமையும், பெரியார் ஒரு தொலைநோக்காளர் பெரியார் அறிவியல் பார்வையும் அணுகு முறையும் ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட்டது.
கல்லூரி செயல் அதிகாரி கோ.மகாதேவன் தலைமை தாங்கினார். பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு வரவேற்புரை யாற்றினார். கழக மாவட்டத் தலை வர் மா.மு.சுப்பிரமணியம்; துணைத் தலைவர் ச. நல்லபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக குமரிமாவட்ட செயலா ளர் கோ.வெற்றிவேந்தன் தொடக் கவுரையாற்றினர். கல்லூரி முதல் வர் சிறீலதா இணைப்புரை யாற்றினார். தமிழ் பேராசிரியை பெனில் போட்டியினை ஒருங்கி ணைத்தார். 100க்கும் அதிகமான மாணவ,மாணவியர்கள் இந்த பேச்சுப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பெரியாரு டைய நூல்கள் வழங்கப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *