இ.எஸ்.அய்.சி. திட்டத்தினை உழைக்கும் வர்க்கத்தினர் அனைவருக்கும் அமல்படுத்திடுவீர்! மாநிலங்களவை சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் – மு.சண்முகம் எம்.பி. வலியுறுத்தல்!

1 Min Read

புதுடில்லி, பிப்.4- மாநிலங்களவையில் 02.02.2024 அன்று தி.மு.க. கழக உறுப்பினரும் தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளருமான மு.சண்முகம் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது:–

தற்பொழுது ஒரு தொழிலாளி ரூபாய் 21,000க்கு மேல் ஊதியம் பெற்றால் அவர்களுக்கு இ.எஸ்.அய்.சி – இல் மருத்துவ வசதிகள் கிடைக்காது. 21,000 ரூபாய் மாத ஊதியம் என்பது தற்பொழுது சாதாரணமாக உள்ளது. எனவே பெரும்பாலான தொழிலாளர்களும் இந்த இ.எஸ்.அய்.சி. திட்டத்தில் இருந்து வெளியே வந்து விடுகின்றனர். இத்திட்டம் தொடர்வதற்கு இ.பி.எப்..-இல் உள்ளது போல ரூபாய் 21,000 அனைவருக்கும் கட்டாயமாக்கி இ.எஸ்.அய்.சி. பலனை அனை வரும் பெறும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். இதனால் உறுப்பினர் களின் எண்ணிக்கையும் பணப்பலனும் கூடுதலாக கிடைக்கும்.

அதேபோல இ.எஸ்.அய்.சி. 1950 விதி எண் 52-இ-ன் படி நாள் ஒன்றுக்கு சராசரியாக 172 ரூபாய்க்கு குறைவாக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய பங்கினை செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதன்படி பார்த்தால் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் சராசரி யாக அந்த ரூபாய் 172–அய் விட குறைவாக கிடைப் பதால் அனைவரையும் இ.எஸ். அய்.சி.திட்டத்தின் கீழ் கொண்டுவந்து இ.எஸ்.அய்.சி. திட்டத்தின் பலனைஅனைத்து உழைக்கும் வர்க்கத்தினரும் பெறும் வகையில் ஏற்பாடு செய்வதற்கு அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கழக உறுப்பினர் மு.சண்முகம் வலியுறுத்திப் பேசினார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *