அயோத்தி ராமன் கோயில் விவகாரம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தாழ்த்தப்பட்டோர் அளித்த நன்கொடைகள் தூய்மை அற்றதாம்!
திருப்பி அளிக்கப்பட்ட கொடுமை!

அயோத்தி, ஜன.25- உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி யில் ராமன் கோயிலின் திறப்பு விழாவில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர் களுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது.
இதையடுத்து காங்கிரஸ், சிபிஎம், சமாஜ்வாடி உள் ளிட்ட கட்சிகள் “ராமன் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட் டோம்” என அறிவித்துவிட்டன.
இதற்கிடையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர் சித்த உத்தரகண்ட் ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ் வரனந்த் சரஸ்வதி, “சங்கராச்சாரியார் கள் யாரும் ராமன் கோவில் விழாவில் கலந்துகொள்ள மாட்டோம்” என அறிவித் தார்.
இப்படி தொடர் சர்ச்சை யில் சிக்கி வரும் ராமன் கோவில் திறப்பு விழா தற்போது மற்றொரு சர்ச் சையில் சிக்கியுள்ளது.
தாழ்த்தப்பட்டோர் நன் கொடையில் தயாராகும் பிரசாதம் தூய்மையற்றதாகக் கருதப்படும் எனக் கூறி ராமன் கோவிலுக்கு தாழ்த் தப்பட்ட மக்களிடம் நன் கொடையாக பெறப்பட்ட நிதி திருப்பி அளிக்கப்பட்ட தால் சர்ச்சை எழுந்துள்ளது.
ராமன் கோவில் விழாவுக் காக நாடு முழுவதும் பல் வேறு இடங்களில் நிதி வசூலிக்கப்பட்டு வந்தது.
அந்த வகையில் ராஜஸ் தான் மாநிலம் ஜாலவார் மாவட்டத் திலும் பல்வேறு தரப்பு மக்களிடம் அரசு அதிகாரிகள் நிதி வசூல் செய்துள்ளனர்.
அதில் முண்ட்லா கிரா மத்தில் உள்ள ஏராளமான தாழ்த்தப்பட்ட மக்களிடமும் நன்கொடை வசூ லிக்கப்பட் டுள்ளது.
ஆனால், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அன்று, அந்த கிராமத்துக்கு வந்த சில அதிகாரிகள் அந்த மக்கள் அளித்த நிதியை திரும்ப அவர்களிடமே திரும்பி கொடுத்துள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பிய போது, கோயில் சடங்கு களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் பணம் ஏற்கப் படாது என்றும், அவர்கள் நன்கொடையில் அளிக்கும் பிரசாதம் தூய்மையற்ற தாகக் கருதப்படும் என்பதால் அவர்கள் அளித்த நிதியை திரும்ப அளிப்பதாக கூறியுள் ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், சில ஒடுக்கப்பட்டோர் அமைப்பு களுடன் இணைந்து, இந்த நிகழ்வு குறித்து காவல் துறையில் புகார் அளித் துள்ளனர்.
ஆனால் புகாரை ஏற்க மறுத்த அதிகாரிகள் கிராமத் திற்கு வந்து புகாரை கை விடுமாறு கிராம மக்களை மிரட்டி வருவதாக ஊடகங் களிடம் கிராம மக்கள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *