Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
அரசியல்இந்தியா

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு

Last updated: January 19, 2024 3:32 pm
Published: January 19, 2024
SHARE

விசாரணையை உடனே நிறுத்துக! உயர்மட்ட குழுவுக்கு கடிதம்

சென்னை, ஜன 19 “அதிகார வரம்பற்ற விசாரணை நடத்தும் உயர்நிலைக் குழு, அதிகாரப் பசி கொண்ட ஒன்றிய பாஜக அரசுக்கு துணை போகாமல் தனது விசாரணையை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நிலைக் குழுவுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக திமுக எழுதி யுள்ள அந்தக் கடிதத்தின் விவரம்:
ஏற்கெனவே 23.12.2023 அன்று சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத் துவது குறித்த தி.மு.க.வின் கருத் துக்களை கோரியது. இதற்கு தி.மு.க. தன்னுடைய 12.1.2023 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக “ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு” எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்குப் பிறகு நேரடி விசாரணைக்கு எவ்வித தகவலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அனுப்பப்படவும் இல்லை. அந்த சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு தொடர் நடவடிக்கையும் என்னவென்று தெரியவில்லை..
இதில் கவனிக்க தக்க முக்கிய அம்சம் என்னவென்றால், 2022இல் சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் , மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத் துவது சம்பந்தமாகத்தான் ஆலோ சனைகளைக் கோரியது. ஆனால், தற்பொழுது ஒன்றிய அரசு இதை விரிவுபடுத்தி நாடாளுமன்றமற்றும் மாநில சட்டமன்றங்களோடு, நக ராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை யும் இணைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஆய்வு வரம்புகளை வெளியிட்டுள்ளது. இந்தச் செயல் கூட்டாட்சி தத்துவத் திற்கு எதிராகவும், குடியரசு தலை வர் முறையிலான ஆட்சியை நோக் கியும் செல்வதாகும்.

ஒன்றிய அரசால் நியமிக்கப் பட்ட உயர்மட்ட குழு துவக்கத்திலிருந்தே சட்டவிரோதமானதும் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட தும் ஆகும்.
மேற்குறிப்பிட்ட உயர் மட்ட குழுவானது, அரசமைப்பு பிரிவு 73 இன் கீழ் ஒன்றிய அரசுக்கு அளிக் கப்பட்ட நிர்வாக அதிகாரத்தின் மூலம் அமைக்கப்பட்டதாகும். ஒன் றிய அரசின் நிர்வாக அதிகாரம் என்பது அரசமைப்பு சட்டத்திற்கு உயர்வானது அல்ல. சட்டமியற்றும் அதிகாரம் உள்ளவற்றில் மட்டும் தான் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும் என்று வகுத்துள்ள அரசியல் சட்டத்திற்கு விரோத மானதாகும் என்பதால் இந்த உயர் நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளதே செல்லாத ஒன்றாகும். மாநில அர சின் பட்டியலில் உள்ள நகராட் சிகள், பஞ்சாயத்துகளின் தேர்தல் நடைமுறை பற்றி விசாரிக்க ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டுள்ள இந்த உயர்நிலைக் குழுவிற்கு அதிகார மில்லை என்பது திராவிட முன் னேற்றக் கழகத்தின் திட்டவட்ட மான கருத்தாகும். அது மட்டுமின்றி இந்த உயர்நிலைக்குழு சட்ட விரோதமானது. அரசியல் சட்டத் திற்கு புறம்பானது.

-நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பின்வரும் காரணங்களினால் சாத்தியமற்றது என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறது.
· ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறை முற்றிலுமாக நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று. அரசியல் சட் டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள “சுதந்திரமான, நேர்மையான” தேர்தலுக்கு முற்றி லும் எதிரானது. அரசியல் சட்டத் திற்கு விரோதமானது.
· ஒரே நேரத்தில் தேர்தல் என் பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள சட்டமன்றங்களை முன்கூட் டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலும் அப்படி கலைப்பது அரசியல் சட்ட விரோ தம் என்பதாலும்- இந்த நடை முறையை திமுக எதிர்க்கிறது.
· ஒன்றிய ஆளுங்கட்சியும் மெஜாரிட்டியை இழந்தால்- ஆட்சி கவிழும். அது போன்ற நிகழ்வில் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முன்னெடுப்பிற்கு மீண்டும் இடை யூறு ஏற்படும் என்பதைக் கூட ஆலோசிக்காமல் “ஒரே நாடு ஒரே தேர்தல்” முயற்சி நடப்பது நடை முறை சாத்தியமற்றது.
· ஒரே நேரத்தில் பாராளுமன் றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் என்பது அரசியல் சட்டத் தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. அச்சட்டம் வகுந்து தந்துள்ள ஒன்றிய-மாநில உறவு அடங்கிய கூட்டாட்சி தத்துவத் திற்கு எதிரானது. ஜனநாய நடை முறையை பலவீனப்படுத்துவதாகும்.
· ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கும்- மாநில கட்சிகளுக்கும் இடையே தேர்தல் களத்தில் சம நிலையிலான போட்டியை ஏற்படுத்தி தராது.
· உள்ளாட்சி தேர்தல், சட்ட மன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்த முயற்சிப்பது எழுத்தறிவு இன்னும் பெற வேண் டிய கிராமப்புற மக்கள் மத்தியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
· ஒரே நேரத்தில் தேர்தல் என் றால் அதை எதிர்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு- தேர்தல் ஆணை யர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு எல்லாம் இப்போது இருப்பது போல் 10 மடங்கு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். தேர்தல் அதிகாரி களின் எண்ணிக்கை இப்போது இருப்பதை விட 3 முதல் 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதால்- கட்டுக்கடங்காத செலவினத்தை ஏற்படுத்தும் என்பதால் இது நடை முறை சாத்தியமற்றது.
· நகராட்சிகளும், பஞ்சாயத் துகளும் மாநில அரசின் நிர்வாக அமைப்புகள் என அரசியல் சட் டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. ஆகவே இவற்றுக்கும் சட்டமன்றம், பாராளுமன்றத்துடன் தேர்தல் என்பது அரசியல் சட்ட விரோத மானது. இத்தேர்தல் முழுக்க முழுக்க மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருப்பதாகும்.
· ஒரே நேரத்தில் நகராட்சி, பஞ்சாயத்து, சட்டமன்றம், நாடாளு மன்றதேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் போதிய வாக்குப் பதிவு இயந்திரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கே பல லட்சம் கோடி ரூபாயை செலவிட வேண்டிய நிதி சுமை தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படும் என்பதால் இந்த தேர்தல் நடை முறையால் நிதி சிக்கனம் ஏற்படாது.
· ஒரே நேரத்தில் தேர்தலை திணிப்பதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது மாநில உரிமை மற்றும் அரசியல் சட்டத் தால் மாநிலத்திற்கு வழங்கப்பட் டுள்ள அதிகாரத்தை பறிப்பதாகும். இது ஒன்றிய – மாநில அரசு உறவு களில் மட்டுமல்ல- ஒன்றியத்திற்கே கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து மிக்க முயற்சி.
· ஒன்றிய, மாநில அரசு உறவு களுக்கும், ஒன்றியத்திற்குமே அச் சுறுத்தலாக இருக்கும் இது போன்ற தேர்தல் நடைமுறை பற்றிய முடி வினை உயர்நிலைக்குழு விளையாட் டாக எடுத்து- அதிகாரப் பசியுடன் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை திருப்திப்படுத்த நினைக்க கூடாது.
· அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் அரசமைப்பு சட்டத்தை நமது அரசமைப்பு சட்டத்தை உரு வாக்கியவர்கள் சிந்தித்து நிறை வேற்றியிருக்கிறார்கள். அப்படிப் பட்ட அரசியல் சட்டத்தை சிதைக் கவோ- உருமாற்றவோ, விரைவில் மக்களால் நிராகரிக்கப்படும் நாடா ளுமன்றமெஜாரிட்டி உள்ளோரின் சுயநலத்திற்கு உயர்நிலைக்குழு துணை போக கூடாது.
இறுதியாக, மேற்குறிப்பிட்ட அனைத்து காரணங்களினால் நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகிய வற்றிற்கு “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற நடைமுறையை மிக கடுமை யாக எதிர்க்கிறது.
ஆகவே உயர் நிலைக்குழு இது தொடர்பான தனது விசாரணையை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் – இல் லையென்றால் திராவிட முன்னேற் றக் கழகம் சட்டத்தின் வழி கொண்டு பொருத்தமான நடவடிக் கையை எடுக்க தள்ளப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-இவ்வாறு அக்கடிதத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது.

Also read

இந்தியா
பீகார் சட்டமன்றத் தேர்தல் முறைகேடுக்குப் பிஜேபி தயார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
பிஜேபி ஆளும் குஜராத்தில் மது விலக்கின் லட்சணம் 82 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்!
Ad imageAd image
நிதி மோசடி செய்தவர்கள் அமைச்சரிடம் தெரிவித்துவிட்டுதான் தப்பி ஓடுகிறார்கள்! விஜய் மல்லையா பேட்டியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கருத்து!
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான டிரம்பின் தடை நிறுத்திவைப்பு
இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 11 தடவை கூறியபோதிலும் பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? ராகுல்காந்தி குற்றச்சாட்டு
அமெரிக்கா – சீனா ஆகிய இரு நாடுகள் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை பிரிட்டனில் உள்ள லண்டனில் நடைபெற உள்ளது
உலகில் முதல் முறையாக விண்வெளி நிலையத்திலிருந்து டிரோன் ஏவும் தொழில்நுட்பம்: காப்புரிமை பெற்றது ரஷ்யா
TAGGED:ஒரே தேர்தல்ஒரே நாடு
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?