குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனப் புலவர் மரு. பரமகுரு படத்திறப்பு

viduthalai
1 Min Read

குன்றக்குடி, ஜன. 14- ஜன.10 புதன்கிழமை மாலை குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் தவத்திரு. குன்றக் குடி பொன்னம்பல அடிகளார் மரு. பரமகுரு படத்தை திறந்துவைத்து புகழுரையாற்றினார்கள். அவர் தனது உரையில்:

தந்தை பெரியாருக்கும் குன்றக் குடி அடிகளாருக்கும் இடையில் இருந்த நட்புறவை நினைவு கூர்ந்தார். மேலும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சார்பாக மறைந்த ஆதீனப் புலவர் பரமகுரு அவர்களுக்கு இறுதி மரியாதை செய்ததையும் குறிப்பிட்டு உரை யாற்றினார்.

கழகத்தின் சார்பில் காரைக்குடி கழக மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி நினைவுரையாற்றி னார். இந்நிகழ்வில் மேனாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் சிங்கம்புணரி இராம. அருணகிரி. (காங்), சிவ கங்கை குணசேகரன் (வ.கம்யூ), மதுரை “காலேஜ் ஹவுஸ்” அதிபர் மணிமொழியன் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை,யிலிருந்து உலகத் திருக்குறள் பேரவை நிருவாகிகள் பலரும் பங்கேற்றார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *