ஆந்திராவில் அரசியல் மாற்றம் காங்கிரஸில் இணைந்தார் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா

1 Min Read

அமராவதி, ஜன.5 சொந்தக் கட்சியான ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை கலைத்துவிட்டு அதன் நிறுவனர் ஒய்எஸ்.ஷர்மிளா நேற்று (4.1.2023) டில்லியில் காங்கிரஸ் கட் சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலை யில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால், ஆந்திர அரசியலில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மறைந்த ஒய்எஸ். ராஜ சேகர ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியு மான ஒய்.எஸ். ஷர்மிளா, எதிர்பார்த்ததை போலவே நேற்று காங்கிரஸ் கட்சியில் தனது ஆதரவாளர்களு டன் இணைந்துள்ளார்.

அப்போது பேசிய ஷர்மிளா, ‘‘எனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி உயிரிழக்கும் வரை காங்கிரசுக்காகவே உழைத் தார். ராகுல் காந்தியை பிரதமராகப் பார்க்க ஆசைப்பட்டார். அவரது ஆசையை நிறைவேற்று வதே இப்போது எனது ஆசை. தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் சந்திரசேகர ராவின் அதிருப்தி வாக்குகள் சிதறக் கூடாது என்ப தற்காக தேர்தலில் போட்டியிடாமல் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தேன்’’ என்றார்.

ஷர்மிளா காங்கிரசில் இணைந்திருப்பதால், அவருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவி அல்லது தேசிய அளவில் ஒரு பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படு கிறது. ஒய்.எஸ்.ராஜ சேகர ரெட்டி மறைவுக்கு பின் னர், காங்கிரஸை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கினார். இப்போது, அவரது தங்கையே காங்கிரசில் இணைந்திருப்பதால், ஜெகன்மோகனுக்கு எதிராக ஷர்மிளாவுக்கு ஆந்திராவில் மிகப்பெரிய கட்சிப் பொறுப்பு அளிக் கப்பட்டு, தேர்தலின்போது ஷர்மிளாவை காங்கிரஸ் களமிறக்கும் என்று கூறப்படுகிறது. ஜெகன் மோகனை தோற்கடிக்க, தெலுங்கு தேசம் – ஜன சேனா – கம்யூனிஸ்ட் கட்சி களுடன் கூட்டணி வைக்க ஷர்மிளாவை வைத்து காங்கிரஸ் காய் நகர்த்த லாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *