ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

Viduthalai
1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

20.10.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஆட்சிக்கு வந்தவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு தெலங்கானா மாநிலத்தில் நடத்தப்படும், ராகுல் உறுதி.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* 2024 பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் சரத்பவார் அறிவிப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அமலாக்கத்துறை தங்கள் விருப்பத்தின் பேரில் கைது செய்ய அதிகாரம் இல்லை என டில்லி உயர்நீதிமன்றம் கண்டிப்பு.

* பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.எம்.இப்ராஹிம் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் கருநாடக மாநில தலைவர் பதவியிலிருந்து  நீக்கம். புதிய மாநில தலைவராக மேனாள் முதலமைச்சர் குமாரசாமி நியமனம்.

எகனாமிக் டைம்ஸ்:

* ஆயுத பூஜை என்ற பெயரில் தலைமை செயலக கட்டடத்தில் சாந்து, மஞ்சள் இவற்றைப் பூச தடை, – கருநாடக அரசு சுற்றறிக்கை.

தி டெலிகிராப்:

* இஸ்ரேல் தன்னை ‘யூதர்களின் தாயகம்’ என்று அடையாளப்படுத்துவதைப் போல இந்தியாவை ‘ஹிந்து தாயகம்’ ஆக்க ஹிந்துத்துவ சித்தாந்தவாதிகள் விரும்பு கிறார்கள் என்கிறார் யேல் பல்கலைக்கழக பேராசிரியர் சுசாந்த் சிங்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *