“இந்து என்பது மதம் இல்லை; அது ஒரு ஏமாற்றும் வழி”

viduthalai
1 Min Read

மோடியை மேற்கோள் காட்டிய சுவாமி பிரசாத் மவுரியா

லக்னோ, டிச. 28 சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் முன்னர் கூறியதை மேற் கோள்காட்டி, “இந்து என்பது மதம் இல்லை. அது ஒரு ஏமாற்றும் வழி” எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள காணொலியில் அவர் மேலும் கூறியதாவது:
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் “இந்து என்பது மதம் இல்லை, மாறாக அது ஒரு வாழ்க்கை முறை மட்டுமே” என இரண்டு முறை கூறியுள்ளார். பிரதமர் மோடியும் “இந்து என்று ஒரு மதம் இல்லை” என கூறி யுள்ளார். அதனால் இந்து என்பது மதம் இல்லை. அது ஒரு ஏமாற்றும் வழிக்கானது ஆகும். மோகன் பகவத், பிரதமர் மோடி பேசியதை கண்டுகொள்ளாத இந்து அமைப் புகள் தன்னைப் போன்ற வர்கள் பேசினால் மட்டும் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டு விட்டது என்று குற்றம்சாட்டுவது ஏன் _ என சுவாமி பிரசாத் மவுரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *