அரியலூரில் “அய்யா இயற்கை அங்காடி” திறப்பு விழா கழகப்பொறுப்பாளர்கள் பங்கேற்பு

1 Min Read

அரியலூர், டிச. 20– அரியலூர் மாவட் டம், செந்துறை நகரில் “அய்யா இயற்கை அங்காடி” திறப்பு விழா 17.12.2013 அன்று காலை 10 மணி யளவில் நடைபெற்றது.
மாவட்ட திராவிடர் கழகம் தலைவர் விடுதலை.நீலமேகன், விழாவிற்கு தலைமையேற்று சிறப் பித்தார், திமுக ஒன்றிய செயலாளர் வி.எழில்மாறன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். காப்பாளர் பெரியார் பெருந் தொண்டர் சு. மணிவண்ணன், மாவட்ட செயலாளர் மு. கோபால், கடம்பன் செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற் றினர்.

பகுதி மக்களின் வாழ்வில் எப் போதும் அக்கறை எடுத்துக்கொள் கிற, தி.மு.க மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ. பெருநற்கிள்ளி, அங்காடியை திறந்து வைத்து உரையாற்றினார். பொதுக்குழு ஊறுப்பினர் சி.காமராஜ், தனது வாழ்த்துரையில் இயற்கைமுறை உணவின் பயன் குறித்து எடுத்துரைத்தார்.
திமுக செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் பூ. செல்வராஜ் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார், மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர், பொருளை அதற்கான விலையினைக் கொடுத் துப் பெற்றுக்கொண்டார்,
மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் பொன்.செந் தில்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மாவட்ட இணைச் செய லாளர் இரத்தின. இராமச்சந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வெ. இளவரசன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சி.கருப்புசாமி, ஒன்றிய செயலாளர் இராசா. செல் வக்குமார், ஒன்றிய அமைப்பாளர் சோ.க. சேகர், நகர தலைவர் பழ. இளங்கோவன், ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் மு.கருணாநிதி, ஒன்றிய செயலாளர் துரை. பிர பாகரன், ஜெயங்கொண்டம் ஆசிரி யர். த. வெங்கடேசன், பெரியாக் குறிச்சி து. அண்ணாதுரை, பொன். சின்னமணி, க.நடராஜன், சு.செல் வக்குமார் மற்றும், பலர் பங்கேற் றனர்.
ஒன்றிய கழகத் தலைவர் மு.முத்தமிழ்ச்செல்வன் நிறைவாக நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *