இந்தியாவிலேயே முதன்முதலாக புதுச்சேரியில் ஊர்க்காவல் படை மகளிருக்கு 6 மாதம் பேறுகால விடுப்பு

1 Min Read

புதுச்சேரி, டிச.14 புதுச்சேரி காவல்துறையில் பணிபுரியும் மகளிருக்கு, 6 மாதம் பேறுகால விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் காவல் துறையின் ஒருபிரிவான ஊர்க்காவல் படை பிரிவில் பணியாற்றும் பெண்களுக்கும் பேறுகால விடுப்பு வழங்க நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் புதுச்சேரி உள்துறை சார்பு செயலர் ஹிரண் வெளியிட்டுள்ள உத்தரவில்: துணை நிலை ஆளுநர் ஒப்புதலின் படி புதுச்சேரி ஊர்க்காவல் படையினர் சட்டம் 1965இன் கீழ் பிரிவு 12(1)(நீ) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.
இதன்மூலம் புதுச்சேரி காவல்துறையில் பணி புரியும் மகளிருக்கு இணையாக மகளிர் ஊர்க்காவல் படையினருக்கு (2 குழந்தைகளுக்கு மட்டும்) 6 மாதம் விடுப்பு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் இத்தகைய நடவடிக்கையின் மூலம் ஊர்க்காவல் படை பிரிவில் பணிபுரியும் இளம்பெண்களுக்கு 6 மாதம் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு கிடைக்கும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *