தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு மதுரை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை, டிச. 9 – சிபிஅய் தரப்பில் மீண்டும் விசாரணை நடத்தி 6 மாதத்திற்குள் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நிகழ்வு குறித்து சிபிஅய் விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கிய சிபிஅய், காவல் துறை ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும் மதுரை சிபிஅய் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.

இதனிடையே, சிபிஅய்-யின் நடவடிக்கை சட்ட விதி முறைகளுக்கு எதிரானது என மதுரையில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ச்சுனன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சிபிஅய்-யின் இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், கொலைகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் அலுவலர், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக் கிச்சூடு வழக்கில், காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மட்டுமே குற்றவாளி என்ற சிபிஅய்-யின் குற்றப்பத்திரிகையை நிராக ரித்தது. மீண்டும் இந்த வழக்கில் புலன் விசாரணை செய்து, ஆறு மாதத்திற்குள் புதிய இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *