காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

1 Min Read

புதுடில்லி, டிச.8- புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில், ‘இந்தியா’ கூட்டணியின் 17 கட்சிகளைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை தலைவர்கள் 6.12.2023 அன்று சந்தித்து பேசினர். இந்த கூட்டத்துக்கு கார்கேயும், ராகுல் காந்தியும் தலைமை வகித்தனர்.
இது தொடர்பாக கார்கே வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில், ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவை தலைவர்களின் சந்திப்பு எனது இல்லத்தில் நடை பெற்றது. இதில், ஒன்றிய அரசை பொறுப்பேற்க வைக்கும் வகையில் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரின் வரும் நாட்களில் மக்கள் பிரச்சினைகளை எழுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.
‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களின் கூட் டத்தை நடத்தும் தேதி விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *