ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

27.10.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: 

* வளர்ச்சி முன்னேற்றம் எதுவும் இல்லாமல், ஹிந்துத்வா முழக்கத்தை முன் வைத்து மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா? தலையங்கத்தில் கேள்வி.

டெக்கான் கிரானிக்கல், சென்னை: 

* இந்தியா என்ற பெயரை மாற்றி பாரத் என்ற பெயரை பாடப்புத்தகங்களில் சேர்க்க முனையும் என்.சி.இ.ஆர்.டி. போக்கை எதிர்ப்போம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் காட்டம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ராஜஸ்தான் தேர்தலில் தோல்வி பயத்தில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பாஜக கையாள்கிறது என முதலமைச்சர் கேலாட் கண்டனம்.

* 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் அறிவித்ததற்கு லாலு பிரசாத் பாராட்டு

தி இந்து:

* தமிழ்நாட்டில் ஜாதி அடிப்படையில் கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு கொள்கைகளுடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க சவால்கள் என்ன? என்பது குறித்து ராமகிருஷ்ணன் விரிவான கட்டுரை

தி டெலிகிராப்:

* வணிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வசதி படைத்த முதியவர்களுக்கு வழங்கப்படும் உயர்தர மற்றும் அதிக விலை கொண்ட வந்தே பாரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல ரயில்களை நிறுத்தி வைக்கும் ரயில்வேயின் நடைமுறைக்கு கேரளாவில் தினசரி பயணிகள் எதிர்ப்பு

* கோவில்களை சுற்றி இருக்கும் தாடி, தொப்பி வைத்துள்ளவர்கள் அடிக்கப்படுவார்கள் என ஜார்க்கண்ட் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குஷ்வாஹா சஷி பூஷன் மேத்தா அடாவடி பேச்சு.

* சந்திரயான் -3 பற்றிய குறிப்பில் புராணங்களையும் அறிவியலையும் சேர்ப்பது தவறல்ல. புராணங்கள் புதுமை மற்றும் புதிய அறிவை வழிநடத்தும் கருத்துக்களை வழங்குகிறதாம்? – ஒன்றிய கல்வி அமைச்சகம்  விளக்கம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *